Header Ads

கனடாவில் புதிய கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

 


கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுப்பிடித்து உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான புதிய மருந்தொன்றை கண்டறிந்துள்ளதாக கியூபெக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொண்ட்றியல் இதய நிறுவகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொல்கிசின் (colchicine) மாத்திரையை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளனர்.

இந்த மருந்து ஏற்கனவே அறியப்பட்ட மற்றும் பிற நோய்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் அந்த மருந்து மீதான ஆய்வுகள் நிறைவுக்கு வந்துள்ளது.

தற்போது கொரோனாவை எதிரான போராட்டத்தில் இதுவொரு மைல் கல் என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய வைத்தியர் ஜீன்-கிளாட் டார்டிஃப் கூறியுள்ளார்.

அதனால் கனடாவில் இந்த தடுப்பு மருந்து மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.