Header Ads

கஞ்சா மூட்டையுடன் ஸ்பெயினில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேர் கைது

 


கஞ்சா மூட்டையுடன் ஸ்பெயினில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 
இக்கைது சம்பவம் வியாழக்கிழமை நண்பகலின் போது Toulouse நகர் அருகே இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கும் போது, இரண்டு மகிழுந்துகள் வருவதை அவதானித்து, அவர்களை நிறுத்தும் படி பணித்துள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து தொடருந்து பயணிக்க, காவல்துறையினர் ஜொந்தாமினரை அழைத்துள்ளனர். 
 
பின்னர் இரு படையினரும் இணைந்து, தப்பிச் சென்ற இருந்து மகிழுந்துகளையும் துரத்தி பிடித்தனர். 
 
மகிழுந்துக்குள் ஆறு இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்று, திரும்பி வந்துகொண்டிருந்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர். பின்னர் அவர்களது மகிழுந்துகள் சோதனையிட்டபோது அதற்குள் 400 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். 
 
ஆறு பேரும் உடனடியாக கைது செய்தனர். அத்தோடு அவர்களிடம் இருந்து  10.000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்க்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.