இலங்கையில் தடை செய்யப்படும் பிளாஸ்திக் பொருட்கள்…
இலங்கை வர்த்தமானியில் பிளாஸ்திக் பொருட்கள் தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானியில் குறுகிய காலத்திற்கு பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்திக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக்கூடிய விளையாட்டு பொருட்கள், பிளாஸ்திக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியன குறித்த திகதிகளில் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments