Header Ads

பிரான்சில் கட்டுப்பாடுகளை மீறிய 90 பேருக்கு நேர்ந்த கதி

 


கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சில், கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்சில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு, Collegien ,Seine-et-Marne நகரில் இருக்கும், பொருட்கள் சேமிப்பகம் ஒன்றில் இரவு 9 மணி ரகசிய விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ரகசிய விருந்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றாமல் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.

அப்போது அங்கு ஏராளமானோர் முகக்கவசம் அணியாமலும், சுகாதார இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்துள்ளனர்.

இதையடுத்து, விருந்தில் கலந்துகொண்ட 90 பேருக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.