Header Ads

லண்டன் சாலையில் நிர்வாணமாக நடந்து செல்லும் நபர்! அதிர்ச்சியில் மக்கள்



 லண்டன் வீதிகளில் ஒரு நபர் நிர்வாணமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டு மக்களும், காவல்துறை அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 24ம் திகதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிய இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நிர்வாணமாக நடந்து சென்ற அந்த நபர் குறித்து அங்கிருந்த மக்கள் உள்ளூர் காவல் துறைக்கு புகார் அளித்திருந்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் தெரிவிக்கையில் அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் கார்டனை நோக்கி விரைவாக நடந்து கொண்டிருந்தார்.

அந்த நடைபாதையில் நடந்து சென்ற ஒரு பாதசாரி, அந்த நபரிடம் ஏன் ஆடைகள் இல்லை என்று கேட்டபோது, தன்னைக் கழுவுவதற்காக தனது ஆடைகளை கழற்றிவிட்டதாக அந்த நபர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த நபர் தனது மனநிலை பாதிப்பானவர் என பல மக்கள் கருதுகின்றனர்.

மேலும், நிர்வாணமாக நடந்து சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.