Header Ads

பிரேசிலை அச்சுறுத்தும் கொரோனா! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

 


கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கு எதிராக மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அங்கு வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 1100-க்கும் அதிகமானோர் பலியான நிலையில் அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

No comments

Powered by Blogger.