யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்ட இந்திய குடியரசு தினம்
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று(26) காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் துணை தூதுவர் ச. பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://www.tamiltwin.com/wp-content/uploads/2021/01/ind.jpg)
No comments