Header Ads

அமெரிக்காவில் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும் கொரோனா தொற்று



சீனாவல் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா தொற்றால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றது.

கொரோனா தொற்றார் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்புக்கள் அதிக கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அமெரிக்காவில் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 628 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 33 இலட்சத்து 69 ஆயிரத்து 732 ஆக உயரந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான மேலும் 4 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 89 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று உறுதியானவர்களில் இதுவரை 1 கோடியே 38 இலட்சத்து 16 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.