Header Ads

பிரித்தானியாவுக்குள் பயணிப்போருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கட்டுப்பாடு

 


பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவரும் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அவை பிரித்தானியாவுக்குள் நுழையாமல் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்காக ஹொட்டல்களை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இதே திட்டம் அவுஸ்திரேலியாவும் பின்பற்றுகிறது.

இதனால் தடுப்பூசிகளுக்கு அடங்காத பல்வேறு வகை திடீர் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மக்கள் தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியே வரவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், GPS மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவும் திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.