பிரித்தானியாவில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள தகவல்
பிரித்தானியாவில் பொதுமுடக்கம் குறித்து பேசியிருந்த வெளியுறவுச் செயலர் Dominic Raab, மார்ச் மாதம் வரை பொதுமுடக்கத்தை விலக்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆகவே, பள்ளிகள் மார்ச் மாதம் திறக்கலாம் என்ற ஒரு கருத்து உருவானது.
இந்நிலையில் நேற்று பேசிய சுகாதாரச் செயலர் Matt Hancock, பொதுமுடக்கத்தை விலக்குவது என்றால், அதன் பொருள் உடனே பள்ளிகளை திறப்பது அல்ல.
எனவே மார்ச் மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது சந்தேகம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது.
நேற்றுடன் 4 மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு முடிந்துள்ள நிலையில், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையிலும் இங்கிலாந்தில் எப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்பது குறித்து பிரதமர் தெரிவிக்கவில்லை.
No comments