Header Ads

கையடக்கதொலைபேசியால் பார்வை இழந்த இளம் பெண்!

 



இந்தியாவில் சென்னை விருகம்பாக்கம், தாங்கல் உள்வாயல் தெருவைச் சேர்ந்தவர் வயது 30 லோகேஸ்வரனும், மனைவி சித்ரா 29 இருவரும் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

லோகேஸ்வரன் வரதட்சணை கேட்டும், மது போதையிலும் மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது

இது தொடர்பாக கடந்த மாதம் 25 ஆம் திகதி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன், கையில் இருந்த செல்போனை மனைவி முகத்தில் வீசி எறிந்துள்ளார்.

இதில் செல்போன் அவரது இடது கண்ணில் பட்டதால் படுகாயம் அடைந்த சித்ராவை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அங்கு நடத்திய பரிசோதனையில் சித்ராவின் இடது கண் பார்வை பறிபோனது தெரிந்தது.

இதுபற்றி வடபழனி அனைத்து மகளிர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.