Header Ads

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை மீறி நடமாடும் மக்கள்!

 


பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய மக்கள் கொரோனா அச்சமின்றி கடும் குளிர்காலத்தில் கூட கடல் கரை சென்று, உடல் பயிற்ச்சி என்ற போர்வையில் நடமாடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக், கடுமையாக சட்ட திட்டங்களை திங்கள் முதல் அறிமுகப்படுத்தவுள்ளார்.

இதில் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்.

மக்களுக்கு ஒரு மணி நேரம் வெளியே செல்ல முடியும் என்று கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அனால் அதனை மட் ஹனக் நிராகரித்துள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை கொண்டு வர முடியாது என்றும். ஆனால் மிக கடுமையான லாக் டவுன் சட்ட திட்டங்களை தாம் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.