Header Ads

6 வயது கருப்பின சிறுமிக்கு கைவிலங்கிட்டு தாக்கிய பொலிசாரால் பெரும் பரபரப்பு



 கனடாவின் Peel பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கருப்பின சிறுமி ஒருத்தி மற்றொரு சிறுமியை அடித்ததுடன், பள்ளி முதல்வர் மீது புத்தகங்களை தூக்கி வீசியிருக்கிறாள்.

பொலிசாருக்கு தகவல் அளித்து பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர், பின் அந்த சிறுமி பொலிசாரிடமிருந்து தப்பியோட முயலும்போது, அவர்களை கடிக்கவும் நகத்தால் கீறியும் தாக்கியுள்ளார்.

உடனே அவளுக்கு கைவிலங்கிட்ட பொலிசார், அவளை கீழே தள்ளி, அவளை முகங்குப்புற சுமார் அரை மணி நேரம் அழுத்திவைத்திருக்கிறார்கள்.

அப்படி செய்யும்போது அவளுக்கு மூச்சுத்திணறும் அபாயம் இருந்ததாக பொலிசாரில் ஒருவரே தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையம் முன் கொண்டு வரப்பட்டது.

விசாரணையில் சிறுமி கைது செய்யப்பட்ட விதத்தில், அவளது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆணைய உறுப்பினர்களில் ஒருவரான Brenda Bowlby, தனது தீர்ப்பில், அந்த சிறுமி வெறும் ஆறு வயதேயான ஒரு குழந்தை.

அவளைக் கைது செய்த ஆறு அடி உயரமுடைய பொலிசார் சிறுமியை நடத்திய விதம் தவறான அணுமுறை 28 நிமிடம் முகங்குப்புற அழுத்திவைக்கப்பட்டும், குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

ஏற்கனவே அந்த குழந்தை, தன் தந்தையின் கொலையையும் தாயின் புற்றுநோய் பிரச்சினையையும் கண்டிருக்கிறாள்.

பொலிசார் அந்த சிறுமி மீது இன ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்ததுள்ளனர்.

அவளையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைக்கத்தான் தாங்கள் அவளுக்கு கைவிலங்கிட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த மனித உரிமைகள் ஆணையம், பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள், பொலிசார் அந்த சிறுமியின் தாய்க்கு 35,000 டொலர்கள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வழக்குச் செலவுக்காகவும், அந்த சிறுமியின் சுயமரியாதைக்கும், உணர்வுகளுக்கும், கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் தீர்வாக இந்த தொகையை வழங்கவேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.