Header Ads

🔴 புதுவருட இரவில் 45.400 சோதனைகள்! - 6.650 பேருக்கு தண்டப்பணம்..!!

 


புதுவருட இரவில் 6.650 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 

 
வன்முறைகளை தவிர்க்கும் முகமாக நாடு முழுவதும் 100.000 காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்றைய இரவில் 45,000 பேரினை காவல்துறையினர் சோதனையிட்டனர். அவர்களில் 6.650 பேருக்கு தண்டப்பணம் அறவிட்டுள்ளனர். அவர்களிடம் இரவு நேரத்தில் பயணிப்பதற்குரிய போதிய ஆவணங்கள் இருக்கவில்லை எனவும், கட்டுப்பாட்டை மீறி அவர்கள் வெளியில் பயணித்திருந்தனர். 
 
அதேவேளை, நாடு முழுவதும் இடம்பெற்ற பல்வேறு இரகசிய விருந்துகளை காவல்துறையினர் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். மொத்தமாக 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 407 பேர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 காவல்துறையினர் காயமடைந்தும் உள்ளனர்.

No comments

Powered by Blogger.