படகு கவிழ்ந்து விபத்து! 43 பேர் பரிதாபமாக பலி
ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா மற்றும் காம்பியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
இது போன்று கடந்த செவ்வாய்கிழமை சிறிய படகில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் லிபியா கடல் பகுதியில் பயணித்துள்ளனர்.
அப்போது மோசமான வானிலை காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 43 பேர் உயிரிழந்துள்ளர்.
மேலும் 10 பேர் மட்டும் உயிர் தப்பியதாகவும் புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
பலர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments