Header Ads

கடந்த 24 மணிநேரம் - கொடூரக் கொரோனாச் சாவுகள் - 612 பேர் பலி!

 


இன்று செவ்வாய்க்கிழமை கொரோனாச் சாவுகள் மிகவும் உச்சத்தை நோக்கிச் சென்றுள்ளது. நேற்று 455 பேர் கொரோனத் தொற்றினாவ பிரான்சிவ் சாவடைந்துள்ள நிலையில்,

 
கடந்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனைகளிலும் முதியோர் இல்லங்களிலும்  612   பேர் சாடைந்துள்ளனர். 
 
 இதனால் மொத்தச் சாவுகள் 74.106   ஆக உயர்ந்துள்ளது.   மருத்துவமனைகளில் மட்டும்  மொத்தமாக 51.868  பேர் சாவடைந்துள்ளனர். மிகுதிப் பேர், முதியோர் இல்லங்களிலும், சமூக இல்லங்களிலும் சாவடைந்துள்ளனர்.
 
கடந்த 24 மணி நேரத்திற்குள் 22.086   பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டி  3.079.943  ஆக உயர்ந்துள்ளது.
 
26.924  கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன.
 
3000 என்ற எல்லையைத் தாண்டி  3.081  பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள்  இது அதிகரித்தே செல்கின்றது. 

No comments

Powered by Blogger.