Header Ads

24 மணி நேரம் - 310 சாவுகள்

 


மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன.  சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது.

 
கடந்த 24 மணி நேரத்திற்குள் 3.582பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று 24.526   பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் ஆய்வுகூடங்களின் கொரோனாச் சோதனைப் பெறுபேறுகள் கிடைக்கப்பெறாமையால் தொற்றின் முழுமையான எண்ணிக்கைகள் கணக்கிடப்பட்டு இருக்காமையால் திங்கட்கிழமைகளின் தொகைகள் குறைவாகவே காட்டப்படுவது வழமை.
 
கடந்த 24 மணி நேரத்திற்குள் 310 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர்.  இதனால் மொத்தச் சாவுகள் 68.060  ஆக உயரந்துள்ளது.
 
நாளிற்கு நாள்  அதிகரித்து 24.812 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
2 666 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள்  இது அதிகரித்தே செல்கின்றது. 

No comments

Powered by Blogger.