Header Ads

பெரும் சந்தைப்பகுதியில் குண்டுவெடி தாக்குதல்! 21 பேர் உடல் சிதறி பலி

 


ஈராக்கின் பாக்தாதில் அமைந்துள்ள முக்கிய சந்தைப்பகுதியில் இருவேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 21 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் உள்விவகார அமைச்சரகம் தகவல் தெரிவித்துள்ளது.

முதல் தற்கொலை குண்டுதாரி, பரபரப்பான சந்தைக்குள் நுழைந்து, தமக்கு சுகவீனமாக இருப்பதாக கூறி உதவி கோரியுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய அப்பாவி மக்கள் அவருக்கு உதவும் நோக்கில் அருகாமையில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்னொருர் வெடிகுண்டை இயக்கியுள்ளார். இதில் கூடியிருந்த மக்கள் பலர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் இல்லாத மிக மோசமான தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இதுவென அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக ஒழித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.