Header Ads

கனடாவில் காருக்குள் இறந்த நிலையில் காணப்பட்ட இருவர்! வெளியாகிய உண்மை

 


கனடாவின் கால்கரி பகுதியில் சாலை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் எஞ்சின் இயக்க நிலையிலேயே அதற்குள் இருவர் உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

தகவலையடுத்து அங்கு வந்த பொலிசார் காரை சோதனையிட்டனர்.

பின்னர், அந்த கார் முந்தைய இரவு அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கலாம்.

காருக்குள் இறந்த நிலையில் காணப்பட்ட இருவரும், திங்கட்கிழமை இரவு 9 முதல் 9.30 மணிக்குள் சுடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு குற்றம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்த உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் நிலையில், யாருக்காவது இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.