Header Ads

பிரான்சில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பொலிஸ் அதிகாரிகள்….பரப்பு சம்பவம்

 



பிரான்சில் Saint-Just பகுதிக்கு அருகிலுள்ள Puy-de-Dôme என்ற இடத்திற்கு பெண் ஒருவரை மீட்க பொலிசார் அதிகாரிகள் சென்றனர்.

பின்பு பொலிசார் அதிகாரிகள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தன்று கணவர் தன்னை மிகவும் துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவயிடத்திற்கு விரைந்த துணை இராணுவ பொலிஸ் அதிகாரிகள், வீட்டின் கூரையின் மேல் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்க முயன்றுள்ளனர்.

இதன் போது பெண்ணின் கணவர் பொலிசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதில், 3 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அந்த நபர் வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் மொத்தம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர் மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து Saint-Just மேயர் கூறியதாவது, சம்பவயிடத்தில் இன்னும் நடவடிக்கை தொடர்கிறது.

சம்பவயிடத்திற்கு GIGN-ஐ சேர்ந்த 7 அதிகாரிகள் சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.