Header Ads

பொலிசாரின் முற்றுகைக்குள் வந்தது கிளிநொச்சி துயிலும் இல்லம்

 



கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில் வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்ற வருகின்றதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் கூடுகைக்கு நேற்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் அப்பகுதிகளில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு வருவதுடன் துயிலும் இல்ல எல்லைப்பகுதியின் இரு மருங்கிலும் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட உள்ளதாகவும், துயிலுமில்ல பிரதேசத்தின் வாயில் பகுதியில் அதற்கான கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

என்ற போதும் அப்பகுதியின் ஊடாக நடைபெறும் போக்குவரத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது. அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.