Header Ads

கருணை மனு கையெழுத்து போராட்டம், மற்று அமைதிப் பேரணிக்காண அழைப்பு

மனிதநேய பொது அழைப்பு

மனித உரிமை ஆர்வலர்களே & அமைப்புகளே
சமூக ஆர்வலர்களே,
பொது அமைப்புகளே,
மாதர் சங்கங்களே,
கிராம அபிவிருத்தி சங்கங்களே,
தொண்டு நிறுவனங்களே,


கருணை மனு கையெழுத்து போராட்டம், மற்று அமைதிப் பேரணிக்காண அழைப்பு.
________________________

தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழும் கனிதரன்(வயது-13) மற்றும் சங்கீதா(வயது-11) ஆகிய இரு சிறுவர்களின் நிகழ் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தந்தையார் ஆகிய ஆயுள் தண்டனை கைதி திரு.ச.ஆனந்தசுதாகர் அவர்களின் பொது மன்னிப்பு கோரிய கருணை மனு கையெழுத்து போராட்டம் 21-03-2018 அன்றைய தினம் “தமிழ் இளையஞர் சமூகம்” விசுவமடு பகுதியில் ஆரம்பித்தது.
(இது எந்த அரசியல் கட்சி பின்னணியும் அற்ற மக்கள் மனிதநேய பணி)

தொடர்ந்து 21-03-2018 தொடக்கம் 25-03-2018 வரை கருணை மனு கையெழுத்து
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேகரித்து எதிர் வரும் 26-03-2018 திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி  மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்க உள்ளோம்.

ஆகவே
23-03-2018 வெள்ளிக் கிழமை கருணை மனு கையெழுத்து போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணமல ஆக்கப்பட்டவர்களின் போராட்ட கொட்டகை முன்னிலையில்   நடைபெற உள்ளது. ஆகவே அனைவரும்  வருகை தந்து பொது மன்னிப்பு கோரிய கருணை மனுவிற்கு ஆதரவு வழங்குங்கள்.

தொடர்ந்து வடக்கில் 23-03-2018 வெள்ளிக் கிழமை வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்று யாழ்ப்பாணத்திலும் கருணை மனுவிற்கு கையெழுத்து சேகரிக்க முன்வாருங்கள்.

24-03-2018 மற்றும் 25-03-2018 நாட்களில் கருணை மனு கையெழுத்து சேகரிப்பதற்காக வடக்கில் துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொள்ளவும் தீர்மானம். எம்முடன் இனைந்திடுங்கள்

கருணை மனுவின் பிரதிகளை பெற்று உங்கள் பிரதேசத்தில் கையொப்பம் சேகரிக்க உங்கள் பிரதேசத்திற்கு நாம் அனுப்ப தயார்.

தயவு செய்து இந்த பதிவை பகிருங்கள் (share)

அல்லது உங்கள் தளத்திற்கு நகல் பிரதி (Copt & past) செய்யுங்கள்.

உங்கள் ஆதரவை வேண்டி

-தமிழ் இளையஞர் சமூகம்-
கிளிநொச்சி

ஒழுங்கமைப்பு விபரங்களிற்கு:
0764620024 கிருஷ்ணா
0771406503 கரிஷ்
0766222409 நிபோஜன்

நகல் பிரதி:
தமிழ் இளைஞர் சமூகம்

2 comments:

  1. சக மனிதருக்காக மக்களின் ஆதரவே எமது பலம். ஒன்றுபடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.