இது சிரியாவில் அல்ல,சிறிலங்காவில் இன்று!
தொடங்கியது முஸ்லீம்களுக்கு எதிரான புத்தரின் தாக்குதல்!!
இனித்தான் தெரியும் முஸ்லீம்களுக்கு அன்று இனச்சுத்திகரிப்பு செய்தது புலிகளா,இல்லை சிங்களமா என்று!!
இது சிரியாவில் அல்ல,சிறிலங்காவில் இன்று!
இலங்கையின் கண்டியில் தமது சிங்கள இனத்தை பாதுகாக்கும் பாதுகாவலர்களால் இன்று தமது இனத்தை இஸ்லாமிய கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாக்க பல நூற்றுக்கணக்கில் திரண்டு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இரண்டையும்,ஏழு வீடுகளையும்,இரண்டுக்கும் மேற்பட்ட கடைகளையும் அடித்து நொருக்கி தீயிட்டு கொழுத்தியுள்ளார்கள்.
அன்று 1983ம் ஆண்டில் இலங்கை முழுவதும் நிகழ்ந்த தமிழருக்கெதிரான இனக்கலவரத்தில் பங்குபற்றிய சிங்கள பாதுகாவலர்களின் பிள்ளைகளே, இன்று 2018ம் ஆண்டில் முஸ்லீம் மதத்தவருக்கு எதிராக தமது தீவிர தாக்குதல்களை தொடுத்துள்ளார்கள்.
புலிகளின் ஆயுதப்போராட்டத்தை அன்று அவசியப்படுத்தியது இதுபோன்ற சிங்கள அடக்குமுறை அதிகார கலவரங்களேயாகும்.
அன்று சிங்கள காடையர்களாக வர்ணிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்று பொல்லுகளோடும்,தடிகளோடும்,கல்லுகளோடும்,பெற்றோல்களோடும் உலாவரும் சாதாரண சிங்கள இளைஞர்கள்தான் என்பதனை யாவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
சிங்களவர் தமது இனத்தை காப்பதற்கு தன் எதிரி இனத்தவன்மீது எந்த எல்லைக்கும் செல்லுவான் எனும் உண்மை நிலையினை அன்று தமிழராக இருந்தும் சிங்களவர்களோடு இணைந்து குடும்பம் நடத்திய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இன்று புரிந்திருக்கும் சிங்களவர் யாரென்று.
இலங்கை முஸ்லீம்களாக நின்று,அன்று இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை (தமிழரை) அழிக்க மதம்கொண்டு திரிந்த இலங்கை முஸ்லீம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவே தமிழரின் கோட்டைக்குள் குடியிருந்த யாழ் முஸ்லீம்களை அன்று எமது தலைவர் அவர்கள் பெரும் தீர்கதரிசனத்தோடு அவர்கள் சேவகம்செய்த இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் அனுப்பி நீங்கள் தற்காலிகமாக எம்மை விட்டு பிரிந்திருப்பது உங்கள் பாதுகாப்பிற்கு சிறந்ததென்று முடிவெடுத்து உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியிருந்தார்.
அன்று எமது தலைவர் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் யாழ் மக்களே அந்த முடிவை எடுத்து பொம்மை வெளியை கொழுத்தி சிங்களவரோடு சேர்ந்து வாழுங்கள் என அடித்து விரட்டியிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
No comments