Header Ads

இஸ்ரேலில் இருந்து உயிர்தப்பி பாதுகாப்பாக இந்தியா திரும்பினார் நடிகை நுஷ்ரத் பருச்சா


இஸ்ரேல் மீதான  ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் யுத்தம் காரணமாக அங்கு சிக்கியிருந்த பொலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா குறித்த தகவல்கள் தெரியாமல் பதற்றம் ஏற்பட்டது. தற்போது நுஷ்ரத் பருச்சா பாதுகாப்பாக இந்தியா திரும்பி உள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும்  அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலில் நடைபெறும் 39 ஆவது ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க பொலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா அங்கு சென்றிருந்தார். நுஷ்ரத் பருச்சா நடித்த அகெல்லி திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இஸ்ரேல் சென்றிருந்தார்.

தற்போதைய யுத்தத்தின் நடுவே நுஷ்ரத் பருச்சாவும் சிக்கிக் கொண்டார் என அவருடன் சென்ற சிலர் தகவல் அனுப்பினர். இதனால் நுஷ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள பொலிவுட் திரை உலகம் பல முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் நுஷ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள முடியாததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், பிற்பகல் நுஷ்ரத் பருச்சா  பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அங்கு செய்தியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போதும் எந்த கருத்தையும் நுஷ்ரத் பருச்சா தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளார். 



No comments

Powered by Blogger.