Header Ads

2024 ஆம் ஆண்டு முதல் நாளாந்தம் எரிபொருள் விலையில் திருத்தம்


தற்போது முன்னெடுக்கப்படும் மாதாந்த விலைத் திருத்தத்திற்கு பதிலாக, அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது இயங்கி வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், எரிபொருள் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.



No comments

Powered by Blogger.