Header Ads

வெட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு


வீடொன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஒருவர்  உயிரிழந்துள்ளார் என வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் எனவும் அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இந்தக் கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



No comments

Powered by Blogger.