Header Ads

'சிம்பாவை' பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு!


'சிம்பா' என பெயரிடப்பட்டுள்ள, சிங்கக்குட்டியை தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் 'சிம்பா' என பெயரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றது என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீரா என்ற சிங்கங்களுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது.

பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்கள் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் சிம்பா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.