Header Ads

பெருந்தோட்டத்துறை தொடர்பில் இன்று விவாதம்


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான திகதியினை சபாநாயகரே வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அவர்களது அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளது. 

No comments

Powered by Blogger.