Header Ads

இரு குழுக்களிடையிலான மோதலில் ஒருவர் பலி

 


கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்லாஸ் தோட்டத்தின் கீழ் பிரிவில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே  3 குழந்தைகளின் தந்தையான குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரரின் மகளின் காதல் விவகாரம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.