Header Ads

900 அடி உயரத்தில் தொங்கிய சிறுவர்கள்!


பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில், ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கேபிள் காரில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு கேபிள் காரில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த 8 பேர் குழு பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது கேபிள் கார் ஒன்று அறுந்து தரையில் இருந்து 900 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது என தெரிவித்துள்ளனர்.

சுமார் 4 மணிக்கு நேரத்திற்கு பின்னர் மீட்பு ஹெலிகொப்டர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன.

மேலும், அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

 குறித்த பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தினமும் சுமார் 150 மாணவர்கள் கேபிள் கார் மூலம் பாடசாலைக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. 



No comments

Powered by Blogger.