Header Ads

கிரேன் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபா நிதி!

மகாராஷ்ராவின் தானே மாவட்டத்தில் இடம்பெற்ற கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சம் ரூபா நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்ர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு தலா .2 லட்சமும், மகாராஷ்ரா
மாநில அரசு தலா.5 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகாராஷ்ரா கிரேன் விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, வி.ஐ.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பில் மிகுந்த வேதனையடைந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் மேற்கொண்டார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபா முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குமாரும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.