குளத்தில் இருந்து தாயும் 10 மாத குழந்தையும் சடலங்களாக மீட்பு
நுவரெலியா - அக்கரப்பத்தனை, லிந்துலை, லோகி தோட்ட குளத்தில் இருந்து தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் இன்று (23) மீட்கப்பட்டுள்ளன.
26 வயதான தாயும் 10 மாதங்கள் நிரம்பிய குழந்தையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாய் குழந்தையுடன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாமென சந்தேகிப்பதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments