Header Ads

வெறிச்சோடி காணப்படும் முக்கிய நகரங்கள்

 கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

அதேவேளை, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த ஹர்த்தாலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பல்கலைகழக ஆசியர் சங்கம் , தமிழரசு கட்சி , உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வடக்கு, பகுதிகளின் பிரதான நகரங்கள் மற்றும் வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதுடன், பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.





No comments

Powered by Blogger.