அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு: 39 பேருக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் கொழும்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில், நிட்டம்புவயில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments