Header Ads

உள்ளே வரும் ரணில்; விசேட பேச்சுக்கு சஜித் ஏற்பாடு


 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையிலான மற்றுமொரு சந்திப்பு வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 21ஆம் திகதிக்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன. எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கட்சியின் முதலாவது குழு சந்திப்பு நடந்ததில், அதில் கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவையே தொடர்ந்தும் சார்ந்திருப்போம் என்கிற தீர்மானத்திற்கு கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அடுத்துவரும் அமர்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியினுள் அதிர்வலையை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.