Header Ads

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவுள்ளோருக்கு வெளிவந்த முக்கிய தகவல்


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் விமானங்களில் ஒரு தடவையில் 75 பயணிகளுக்கு மாத்திரமே பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 4 மணி முதல் அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும் சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் தொற்றுப்பரவலின் நிலைமையினை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக விமானங்களில் 75 இலங்கையர்களும், அதற்கு மேலதிகமாக வெளிநாட்டவர்களும் அழைத்து வரப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு நாட்டுக்கு வரும் விமானங்களில் ஒரு தடவையில் 75 பயணிகளுக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.