Header Ads

அம்பன்தோட்டா துறைமுகத்தின் உரிமையை சீனாவுக்கு வழங்கியது இலங்கை அரசு


இலங்கையின், அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் சீனாவுக்கு சொந்தமாக்கும் உரிமைக்கான சட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கன்னியாகுமரி முனையிலிருந்து 290 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அம்பன் தோட்டா துறைமுகம் சுமார் 540 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் சீனாவுக்கு சொந்தமாக்கும் உரிமைக்கான சட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அம்பன் தோட்டா துறைமுகத்தின் மேம்பாடு, பயன்பாடு தொடர்பாக இலங்கை-சீனா இடையே உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தப்படி, துறைமுகத்தில் 70 சதவீதப் பங்கு சீன அரசுக்குச் சொந்தமான வணிகத் துறைமுக நிறுவனத்துக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இதனை சட்டமாக இலங்கை அரசு இயற்றியுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும், இந்து மகா கடலில் இதன் மூலம் அமைதி கெட்டு போகும் என கூறி, இந்த மசோதாவிற்கு, இலங்கையின் தமிழ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதையும் மீறி இலங்கை அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.