Header Ads

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்டம்! இரு பெண்கள் உட்பட எழுவர் கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வொன்றில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரு பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து மதுபானம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.