Header Ads

சீனாவிடம் ஒட்சிசன் கோரும் பிரதமர்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒட்சிசன் மற்றும் வென்டிலேட்டர்களை சீனாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பிலுள்ள சீனத் தூதரக தூதுவருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஒட்சிசன் செறிவூட்டிகள், ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை இலங்கை கோரியதாக கூறியுள்ளார் என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.