Header Ads

3 நாள் பயணக்கட்டுப்பாடு சட்டத்துக்குப் புறம்பானது


ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமல், மூன்று நாள்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடாகுமெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சட்டத்துக்கு புறம்பாக விதிக்கப்பட்டுள்ள இப்பயண கட்டுப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் ​செய்தால், விதிக்கப்பட்டுள்ள சகல பயணக்கட்டுபாட்டுகளையும் அரசாங்கம் மீளப்பெறவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

“1947இல் நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால் மாத்திரமே பொதுமக்களின் பயணக்கட்டுபாடுகளை கட்டுப்படுத்தலாம்” என்றார்.

எனினும், 1932ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட  இராசதானிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கு அமையவே, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தால் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.