Header Ads

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு!



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம, தணமல்வில மற்றும் ஹெட்டிப்பொல ஆகிய பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

89 மற்றும் 38 வயதுகளையுடைய இரு ஆண்களும் 60 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 591ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 90 ஆயிரத்து 917 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 405 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.