Header Ads

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!


மன்னார் – தலைமன்னார் வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி ரயிலுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததுடன், 22 பேர் வரையில் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.