Header Ads

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம்!


சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) கொழுப்பில் முன்னெடுக்க இருக்கின்றது.

உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் என்ற தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

மேலும்,  சுற்றாடலை பாதுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து – புறக்கோட்டை வரை பேரணியாகச் செல்வதற்கும் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.