Header Ads

பயங்கரவாத தாக்குதல் இரு இளைஞர்கள் கைது

 


பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 
இரு வேறு கைது சம்பவங்கள் இரு வேறு நகரங்களில் இடம்பெற்றுள்ளன. Direction générale de la sécurité intérieure அதிகாரிகள் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதலாம் இளைஞர் Mantes-la-Jolie (Yvelines) நகரில் தனது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார் எனவும், இரண்டாமவர் Avion (Pas-de-Calais) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருவரும் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், இராணுவத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

No comments

Powered by Blogger.