Header Ads

ஆதரவு வழங்கியோருக்கு நன்றி கூறியுள்ள கூட்டமைப்பு..!


ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேறியுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கை தொடர்பிலான பிரேரணைக்கு ஜெனீவாலில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பிரேரணையை கொண்டு வந்த பிரித்தானியா மற்றும் இணை அனுசரணை வழங்கிய நாடுகளுக்கு விசேட நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கியவர்களை விட எதிராக இரு மடங்கானவர்கள் இலங்கை;கு எதிராக வாக்களித்துள்ளனர். இது பெரிய வெற்றியாகும்.

No comments

Powered by Blogger.