Header Ads

7 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!



இலங்கையில் இதுவரையில், 7 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) மாத்திரம் மேலும் 8 ஆயிரத்து 323 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, தடுப்பூசி செலுத்த ஆரம்பித்த கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் தற்போது வரையில், நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 52 ஆயிரத்து 298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசியின் மேலும் 5 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.