Header Ads

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!



நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து ஏழாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 235 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 623 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்னும் இரண்டாயிரத்து 825 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரை 559 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.