Header Ads

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!



இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 672 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தொற்று உறுதியானோரில் 4 ஆயிரத்து 234 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 453 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.