Header Ads

நல்லூர் வரவேற்பு வளைவில் பொலிகண்டிப் பேரணிக்கு பெரும் வரவேற்பு!

 


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றுள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை சென்றடைந்துள்ளது.இந்நிலையில், மக்கள் எழுச்சிப் பேரணியை நல்லூர் வரவேற்பு வளைவில் வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து வரவேற்றுள்ளனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டம் சாவகச்சேரி பகுதியில் கால் பதித்து சற்றுமுன்னர் மாமனிதர் ரவிராஜின் தென்மராட்சி மண்ணில் எழுச்சி கொள்ளும் மக்கள் படை வெள்ளத்துடன் முன்னேறியுள்ளது.

மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு தமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என இந்த அறவழிப் போராட்டம் இன்று யாழ்.நோக்கி நகர்கின்றது.

 தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் போராட்டமானது, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை அடைந்து பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.

 

No comments

Powered by Blogger.