Header Ads

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற சிறுமி உள்ளிட்ட இருவர் படுகாயம்!



மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற சிறுமி உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளிக்கு சென்ற சிறுமியும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.